சடாட்சரவேல் தீபம் அமைப்பினைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் முதலில் கோவில்களில் எதற்காக தீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
சடாட்சரவேல் தீபத்தின்; அமைப்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்றாக காட்சியளிக்கின்றது. பக்தர்களின் குறைகளை போக்கவும், எண்ணிய எண்ணங்கள் ஈடேறவும் முருகப்பெருமானின் அளவற்ற சக்தியை உணர்த்தும்படியும் புனிதத்தன்மையோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த சடாட்சரவேல் தீபம் இதுவரை வேறு எங்கும் காணக்கிடைக்காத அறிய பொக்கிஷம் ஆகும். சடாட்சரவேல் தீபம் முழுக்க முழுக்க செப்பு உலோகத்தால் உருவாக்கப்பட்டது. ஸ்ரீ முருகப்பெருமானின் மிகுந்த சக்திவாய்ந்த நாம மந்திரமான சரவணபவ என்ற எழுத்துக்களின் வடிவமான ஆறு கோணங்களை உடைய சடாட்சர சக்கரத்தின் வடிவத்தை சிறிதும் மாறாமல் கொண்டிருப்பதே சடாட்சரவேல் தீபம் ஆகும். சடாட்சரவேல் தீபத்தின் ஆறு கோணங்களின் கீழ் பகுதியில் ஆறு தாமரை மலர்கள் செப்பு உலோகத்தால் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆறு தாமரை மலர்களும் முருகப் பெருமான் ஆறு தாமரை மலர்களில் அவதரித்ததை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சடாட்சர அமைப்பின் நடுப்பகுதியில சர்வ சக்திவாய்ந்த சடாட்சர வேல் யந்திரம் செப்பு உலோகத்தில் உருவாக்கப்பட்டு யாகங்கள் மூலம் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. (ப்ராண ப்ரதிஷ்டை என்றால் யந்திரத்திற்கு உயிர் கொடுத்தல் என்று பொருள்). இந்த யந்திரத்தின மேல் பக்கத்தில் ஸ்ரீ முருகப்பெருமானின் சக்திமிக்க வேல் செப்பு உலோகத்தால் உருவாக்கப்பட்டு யாகத்தில் உயிர் ஊட்டப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஆறு தீபங்களும் இறைவனின் ஆறு முகங்களாகவும், யந்திரம் இறைவன் உறைகின்ற இடமாகவும் உள்ளது. ஒவ்வொரு கோணங்களிலும் ஒவ்வொரு தீபம் என்று மொத்தம் ஆறு கோணங்களில் ஆறு தீபங்கள் உள் பக்கம் நோக்கியவாறு அமைந்துள்ளது. சடாட்சர கோணங்கள் ஒவ்வொன்றை சுற்றிலும் ஒன்பது புள்ளிகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது புள்ளிகளும் ஒன்பது கிரகங்களான நவ கிரகங்களை தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே சடாட்சரவேல் தீபத்தை ஏற்றி வழிபடும்போது நவகிரகங்கள் எதுவும் ஸ்ரீ முருகப்பெருமானின் பக்தர்களை எப்பொழுதும் துன்பத்திற்கு ஆளாக்குவதில்லை என்பதை குறிக்கின்றது.
சடாட்சர வேல் தீபம் வாங்கும் அன்பர்கள் அவர்கள் சுலபமாக கையாள்வதற்கு வசதியாக தீபத்தை பாதுகாப்பாக வைக்கக்கூடிய பெட்டி ஒன்றும், தீபத்தோடு சேர்த்து செப்பு உலோக வேல், செப்பு வேல் யந்திரம், சடாட்சரவேல் தீபத்தை பயன்படுத்தவும், வழிபடவும் உதவும் கையேடு, மற்றும் துணைப் பொருட்களும் பெட்டியுனுள் பாதுகாப்பாக வைத்து வழங்கப்படுகின்றது.
நாம் மற்றவர்களை உயர்த்துவதன் மூலம் உயர்கிறோம்
வேலுண்டு வினையில்லை! சடாட்சர தீபம் உண்டு குறையில்லை!!
Happy Customer
sold
Countries
Customer Care
இந்த ஆறுமுகம் கொண்ட பெருமானே பக்தர்களின் துயரங்களையம் கவலைகளையும் போக்கவும் விரும்பி வேண்டிய வரங்களை அருளவும் ஆறு படை வீடுகளாக அருள்பாளிக்கின்றார்.