நாங்கள் யார்?

எங்களைப் பற்றி

25 ஆண்டு கால ஆன்மீக பயணத்தில் சென்றுகொண்டு இருக்கும் நாங்கள்

வேலுண்டு வினையில்லை!              சடாடச்சரம் உண்டு குறையில்லை !

ஸ்ரீ முருகப் பெருமானின் திருவருளால் அவரின் பாதம் பற்றி 25 ஆண்டு கால ஆன்மீக
பயணத்தில் சென்றுகொண்டு இருக்கும் நாங்கள் இந்தியாவின் மிகவும் புராதனமான மற்றும்
புனிதமான குரு பரம்பரையை சார்ந்தவர்கள.; பொது மக்களுக்காகவும் பொது மக்களின்
நலனுக்காகவும் பல்வேறு ஆன்மீக சேவைகளை செய்து வருவதில் முக்கிய இடத்தில்
இருக்கின்றோம்.

ஸ்ரீ முருகப்பெருமானின் மீது அளப்பறியா பக்திகொண்டு ஆறு படை வீடுகளிலும்
தரிசனம் செய்ய ஆவல் கொண்டு ஆனால் பொருளாதார நெருக்கடியின் காரணமாக செல்ல
முடியாத ஆன்மீக அன்பர்களை ஒவ்வொரு ஆண்டும் ஆறு படை வீடுகளுக்கு எவ்வித
கட்டணமும் இன்றி அழைத்துச் செல்கின்றோம்.

கலியுகத்தில்

கலியுகத்தில் அனைத்து உயிர்களையும் காத்து வரும் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ
முருகப்பெருமான் குறித்து சித்தர்களும் ரிஷிகளும் எழுதி வைத்துள்ள செய்திகள், பாடல்கள்,
வழிபாட்டு முறைகள், அதன் பலன்கள் குறித்தான அனைத்து விபரங்களையும் பழங்கால
ஓலைச்சுவடிகள், கிரந்தங்கள், பழைய ஏட்டு பிரதிகள் ஆகியவற்றை ஆராய்ந்து அதன்
மகத்துவத்தை மக்களுக்கு கொடுத்து வருகின்றோம்.

ஸ்ரீ பரசுராமர் குரு

பரம்பரை வழியின் பெரிய குருமார்களின் வழிகாட்டுதலின்படி

இவ்வகையில் நாங்கள் கடைபிடித்து வரும் ஸ்ரீ தத்தாத்ரேயர் – ஸ்ரீ பரசுராமர் குரு பரம்பரை வழியின் பெரிய குருமார்களின் வழிகாட்டுதலின்படி ஸ்ரீ பரசுராம கல்ப சூத்திரம் என்ற பொக்கிஷத்தின் சில சுவடிகளை தேடி அலைந்தோம். அவ்வாறு தேடியதின் பயனாக திருவனந்தபுரம் திருவள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ பரசுராமர் ஷேத்திரத்தில் ஒரு குருமகான் அவர்களை சந்தித்தோம். அவரிடமிருந்த ஒரு சுவடியை எங்களிடம் கொடுத்து அதில் உள்ளவாறு ஸ்ரீ முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுமாறும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவரித்தார்.  அவ்விடத்தில் கருணையே உருவான ஸ்ரீ முருகப்பெருமானை  வழிபடும் முறைகளையும் அதன் பலன்களையும் காணும் பாக்கியம் கிடைத்தது. அதிலிருந்து இருந்து எடுக்கப்பட்ட சில முக்கியமான அறிய தகவல்களைக்கொண்டு ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட்டு முழுமையான பலன்களையும் அருளையும்; பெறுவதற்காக தீபம் ஒன்றை உருவாக்கினோம்.  அதுவே, “சடாட்சர வேல் தீபம்” ஆகும். 

satatchara vel deepam

அந்த கருணையே உருவான ஸ்ரீ முருகப்பெருமானின் அருளாலும் சடாட்சர வேல் தீபத்தின் வழிபாட்டாலும் அந்த 6 குடும்பங்களும் தங்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவடைந்ததை கூறி முருகப்பெருமானின் சக்தியையும் தெரிவித்தனர்.

               அன்றே எங்கள் சமஸ்தானத்தின் ஆன்மீக குழு கூடி முடிவு செய்து இதை அனைத்து மக்களின் நலனுக்காகவும் ஸ்ரீ முருகப்பெருமானின் கருணையையும், சடாட்சர வேல் தீபத்தின் பெருமையையும் உலகிற்கு பறைசாற்ற சடாட்சர வேல் தீபத்தை உருவாக்கி அந்த தீபத்தின் வடிவமைப்புக்கும் வழிபாட்டு முறை குறிப்புகளுக்கும் காப்புரிமை செய்து உலகிற்கு அறிமுகம் செய்தோம்.

               சடாட்சர வேல் தீபம் ஏற்றி வழிபடும்போது ஆறு படை முருகனையும் ஒரு சேர வழிபட்டதின் பலன் கிடைக்கின்றது என்பதை அனுபவத்தில் அன்பர்கள் உணர்ந்துகொள்ள முடியம்.

               எங்கள் குரு பரம்பரையின் ஆசிரமத்தால் மட்டுமே “சடாட்சர வேல் தீபம்” உருவாக்கப்பட்டு உள்ளது.  இந்த தீபம் எங்களின் குரு பரம்பரை ஆசிரமத்தின் அங்கமான “கொல்லம் நம்பூதரி பொருட்கள், ஸ்ரீ பரசுராமர் வழிபாட்டு ஷேத்திரம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம்” என்ற முகவரியின் இணையதளம் வழியாக மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.  இந்த தீபம் முழுவதும் செவ்வாயின் உலோகமான செப்பு உலோகத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு புனித பயணம் :

இதை உருவாக்க எங்களுக்கு சுமார் 6 மாத காலங்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர் 6 தீபங்களை மட்டும் செய்து அதை எங்கள் ஆசிரமத்தின் தொடர்பில் இருந்த 6 குடும்பத்திற்கு வழங்கினோம். சுவடிகளில் இருந்த குறிப்புகளை அச்சடித்து அவர்களுக்கு வழங்கி அதன்படி கடைபிடிக்கத் தெரிவித்தோம். அவர்களில் இரண்டு அன்பர்கள் ஆறு செவ்வாய் கிழமைகளும், இரண்டு அன்பர்கள் ஆறு சஷ்டி தினத்திலும், இரண்டு அன்பர்கள் ஆறு கார்த்திகை நட்சத்திரங்களிலும் நாங்கள் கூறியபடி ஸ்ரீ முருகப்பெருமானை “சடாட்சர வேல் தீபம்” ஏற்றி வேண்டுதல் வைத்து வழிபட்டனர்.

karthigai pengal deepam

வேலுண்டு வினையில்லை! சடாட்சரம் உண்டு குறையில்லை!

தாக்கம்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று எங்கெல்லாம் ஸ்ரீ முருகப் பெருமானின் பக்தர்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் இது அனுப்பப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றார்கள். எங்களின் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்களிடம் மட்டுமே இது கிடைக்கின்றது. அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்களின் பெயர், முகவரி மற்றும் செல் எண் ஆகிய விபரங்கள் இந்த வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

satatchara deepam

" உங்கள் ஆன்மீகப் பாதையை ஒளிரச் செய்யுங்கள் "